Ad Widget

இறந்தவர்களுக்கு அஞ்சுலி செலுத்த உரிமை உண்டு

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதனை யாரும் தடுக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

இறந்தவர்களை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது. அவர்களை விற்பனைப் பொருளாக கையாள்வதையும் கைவிடவேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், இறந்தவர்களுக்காக அவரது உறவுகள் அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது. அது அவர்களின் முழுமையான உரிமையாகும். அதனை பிரபல்யப்படுத்தி வியாபாரம் ஆக்கக்கூடாது என்றும் தவராசா குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, பயங்கரவாத அமைப்பு என்றும் எனவே மரணித்த புலிகளை பொது இடங்களில் நினைவுகூருவது, சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டத்துக்கு எதிரானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தவராசா இவ்வாறு கூறினார்.

Related Posts