அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியானது!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய அவர்களுக்கான சம்பளம் இன்று (செவ்வாய்கிழமை) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் இன்றைய தினம் முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது.

Related Posts