அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பார்க் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்லியன்ஸ் பார்க் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானதாகவும், மேலும் 16-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் மற்றும் அதை நடத்தியவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.