Ad Widget

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழருக்கு விடிவு பிறக்கட்டும்! – சம்பந்தன் தீபாவளி வாழ்த்து

நீண்ட காலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு மிக விரைவில் விடிவு ஏற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி வாழ்த்துச் செய்திக் குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘மிகவும் குதூகலமாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது மக்கள் நீண்டகாலமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். அவற்றுக்கு மிகவும் விரைவில் விடிவு ஏற்படவேண்டும். அடுத்த தீபாவளிப்பண்டிகைக்கு முன்னதாக இவ்விடயம் இடம்பெறவேண்டுமென விரும்புகின்றோம்.

அதற்கான கருமங்கள் முன்னெடுக்கப்படுவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்பதையும் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.’

Related Posts