கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்ட நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
குறித்த நான்கு பேரில் ஒருவர் பௌத்த பிக்கு என்றும் ராஜித குறிப்பிட்டார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதெனக் குறிப்பிட்ட ராஜித, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, நாட்டின் அமைதியை நிலைநாட்ட அரசாங்கம் அதிகூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதென்றும், அதற்காகவே கண்டியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதென்றும் ராஜித மேலும் குறிப்பிட்டார்.