Ad Widget

மாவையின் புதல்வன் வலி.வடக்கில் போட்டி?

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், வலி. வடக்கு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என அந்தக் கட்சியின் நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.

வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுகிர்தன் இம்முறையும் போட்டியிடுவதுடன், மாவை சேனாதிராசாவின் மகனும் போட்டியிடுகிறார்.

போர்க்காலத்தில் இந்தியாவில் படித்த அவர் போர் முடிந்த பின்னரே யாழ்ப்பாணம் திரும்பினார். அவரின் அரசியல் பிரவேசம் இது என கட்சித் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இந்தத் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் உறுதிப்படுத்த முடியவில்லை.

Related Posts