தங்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சியுடன் முறுகல் நிலை இருப்பதாக புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மேற்கொள்ளும் ஒருசில செயற்பாடுகள் காரணமாக கொள்கை ரீதியான பிரச்சனைகள் தோன்றியுள்ளன.
எனினும் தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.