யாழில் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்ள விடாது பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அகில இலங்கை தமிழ் மொழித் தினம் (இன்றையதினம்) யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு இருந்தார்.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் யாழ்.இந்துக்கல்லூரியின் மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னதாக செய்யப்பட்டு இருந்தன. எனினும் இன்றைய தினம் காலை மழை பெய்தமையால், நிகழ்வு கல்லூரி கேட்போர் கூடத்திற்கு மாற்றப்பட்டது.
அதன் காரணமாக மண்டபத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதனை அடுத்து நிகழ்வில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் திருப்பி அனுப்பட்டனர்.