Ad Widget

சாவகச்சேரி விபத்தில் குடும்பஸ்தர் பலி!

சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரியை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்ய சாவகச்சேரி பொதுச்சந்தைக்கு கொண்டு சென்ற வழியில் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் தோப்பு ஒழுங்கை மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிவராஜா என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts