வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆதரவு

வடக்கு கிழக்கில் பொதுமக்களால் கடந்த சில மாதங்களாக பல காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை அரசு கவனத்தில் எடுக்கவில்லை. எனவே அரசின் கவனத்தையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்குமுகமாக 27-04-2017 வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்கு போராடும் மக்களிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களின் கோரிக்கைக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினராகிய நாமும் எமது முழு ஆதரவினையும் வழங்குகின்றோம்.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
25-04-2017

Related Posts