மக்களின் உரித்துக்களுக்கான – உரிமைக்கான போராட்டங்கள் என்றும் வெற்றி பெற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களைத் தேடுகின்ற நீண்ட – நெடிய போராட்டத்தை, கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்கின்றனர்.
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்கள் நடத்தும் கடையடைப்புப் போராட்டத்துக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம். இவ்வாறு அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
இரண்டு மாதங்களாகத் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தும் அவர்களை அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கடையடைப்பு மூலமாக கொடுக்கப்படும் மேலதிக அழுத்தத்தின் ஊடாக, அரசு அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – என்றார்.