அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கான்பராவில் அவுஸ்ரேலியப் பிரதமர் ரேன்புல்லைச் சந்தித்தபின்னர் அவருடன் நின்று இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இதன்போது ‘அவுஸ்ரேலியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக இலங்கை நாட்டவர்கள் சட்டத்தை மீறியுள்ளனர், ஆனால் அவர்கள் அனைவரும் நாடு திரும்பினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளமாட்டார்கள்.
திரும்பி வாருங்கள், எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டது’ என அழைப்பு விடுத்தார்.