பூட்டிய அறையில் இருந்து சிறுமியின் சடலம் மீட்பு

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அகிலேஸ்வரன் அகிலா (வயது14) என்றச் சிறுமியின் சடலம், திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற இளவாலை பொலிஸார், சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த சிறுமி, சுகவீனமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற போது, கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில், சிறுமியின் தந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts