Ad Widget

தமிழ் மக்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் பெரும்பாலும் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வரவு-செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இந்த வரவு செலவு திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான முயற்சிகள் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனினும், மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய பல வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை, வழமையான வரவு- திட்டங்கள் போன்று இம்முறையும் வடக்கு- கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள்ச்சி என்பவை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதாக இல்லை.

எனவே இவ்வரவு-செலவு திட்டம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts