வடக்கு சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான பிரச்சாரம் இணையத்தளம் ஒன்றில் வௌியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்கள் உட்பட வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts