சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில், இன்று (புதன்கிழமை) இச் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.