Ad Widget

யாழ்ப்பாணத்தில் கலாநிதி அப்துல்கலாமின் 85 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வு

இந்திய குடியரசின் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமாகிய பாரத ரத்னா கலாநிதி ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 85 ஆவது பிறந்த தின நினைவு நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.

யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்வுகள் யாழ் பொது நூலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (15) இடம்பெறவுள்ளன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். யாழ் இந்து கல்லூரி அதிபர் ஐ.தயானந்த ராஜா யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் .க.எழில்வேந்தன் மற்றும் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை அதிபர் வ.சண்முகரட்ணம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .

Related Posts