மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த கனகரத்தினம் பாபு (வயது 38) என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டு மோட்டாருக்கு திருத்த வேலை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

Related Posts