யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலையம் வருகின்ற 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் வரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா புதிய கட்டடத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளார்.
தற்போது தனியார் ஓருவருக்கு சொந்தமான கட்டடத்தொகுதியிலேயே யாழ் பொலிஸ் நிலையம் இயங்கிவருகின்றது.
புதிய பொலிஸ் நிலையம் யாழ் பிரதான வீதியில் யாழ் மாநகர சபை மைதானத்தின் அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

