மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முத்தரப்பு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், முதலாவதாக யாழ். ஆளுநர் அலுவலகத்தில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்தார். அங்கு, பான் கீ மூனுக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வடக்கு ஆளுநர் மற்றும் அதிகாரிகள் தரப்பிற்கும் பான் கீ மூனுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.