புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக சிலர் கூறுவது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் தாம் பிரபல்யம் அடைவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக வேறு சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சர்வதேச வைத்தியர்கள் குழு அவசியம் என்று கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்ற போதிலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் மருத்துவ அறிக்கைகள் கோரப்பட்டுள்ள போதிலும் சிலர் அவற்றை இன்னும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.