யாழ் சிறைச்சாலைகளிலுள்ள சில கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களே தம்மை விரைவில் பிணையில் விடுவிக்குமாறு கோரி, நேற்று முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.