மலையக பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நிவாரண உதவிகளை 15.06.2016 அன்று புதன்கிழமை வழங்கி வைத்தார்.
இதற்கமைய புசல்லாவ பகுதியில் 23 குடும்பங்களுக்கும், தோரகலவில் 33 குடும்பங்களுக்கும், கலத்தவில பகுதியில் 11 குடும்பங்களுக்கும் தேவையான உலர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை அவர் வழங்கினார்.
இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் மேலும் பல நிவாரண உதவிகள் மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்படும் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.