வட மாகாண சமூக சுகாதாரத் தொண்டர்கள் வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியமனம் வழங்கலின்போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி வடமாகாணத்தைச் சேர்ந்த சமூக சுகாதாரத் தொண்டர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த வடமாகாண சபை அமர்வின்போது வடமாகாண சபை முன்பாகவும், அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆளுநர் அலுவலகம் முன்பாகவும், நேற்று முன்தினம் திங்கட்கிழமை மற்றும் நேற்று செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் வடமாகாண சுகாதார அமைச்சின் முன்பாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.