வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்று சனிக்கிழமை காலை வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடவையாகவும் தீர்வு திட்டம் கையளிப்பதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் கவலையடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.