உலகில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்

உலகில் கடந்த ஒரு நூற்றாண்டில் புலிகளின் எண்ணிக்கை முதல் முறையாக அதிகரித்துள்ளதாக சூழலியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 3 ஆயிரத்து 890 புலிகள் தற்போது வாழ்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச வனவிலங்கு நிதியம் மற்றும் உலகளாவிய புலிகள் மன்றம் ஆகியன கூறியுள்ளன.

ஆயிரத்து 900 ஆண்டு ஒரு இலட்சமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டு மூவாயிரத்து 200 வரை குறைவடைந்திருந்தது.

இந்த நிலையில் அரசாங்கம், உள்ளூர் சமூகங்கள் மற்றும் சூழலியலாளர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் புலிகளை பாதுகாக்க முடியும் என சர்வதேச வனவிலங்கு நிதியத்தின் சர்வதேச பணிப்பாளர் நாயகம் மார்கோ லம்பேட்னி குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் வாழும் நாடுகளின் அமைச்சர்கள் இந்திய தலைநகர் புதுடில்லியில் இவ்வாரம் சந்தித்து கலந்துரையாடவுள்ள நிலையில், புலிகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பின் மூலம் 2020 ஆண்டளவில் புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts