வடமாகாண சபை அமைச்சர்கள் நால்வரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் அறுவர் அடங்கிய குழு இன்று மாலை 5.30க்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போதே குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டுள்ளதாக அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.
இந்தக் குழுவில் வடமாகாண சபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், விந்தன் கணகரட்னம், சூசைரட்ணம் மிரிமுசிராய்வா உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.