தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க் நகரில் வேகமாகப் பயணித்த கார் மோதி, இலங்கையர்களான கணவனும் மனைவியும் பலியாகினர்.
வேகமான பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஹோட்டல் ஒன்றுக்கு சென்று விட்டு, நடைபாதையால் நடந்து சென்று கொண்டிருந்த இலங்கைத் தம்பதி மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஜொஹானஸ்பேர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் சாரதியும் இந்தச் சம்பவத்தில் பலியானார்.