லண்டனில் வாகனம் மோதி தமிழ்ப் பெண் மரணம்!

கடும்பனிப் புகார் காரணமாக லண்டன் மிற்சம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் நடுத்தர வயதுடையவரான சுகந்தி என்பவரே உயிரிழந்தவராவார்.

‘சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றும் இவர் 3 பிள்ளைகளின் தாயாராவார். பாதசாரிகளுக்கான நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Posts