உடல்நல மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு முதியோருக்கான உடற்பயிற்சி நிகழ்வு நேற்று முன்தினம்(29) யாழ் மாவட்டச்செயலகத்துக்கு எதிரே உள்ள பழைய பூங்காவில் காலை 9.30 மணி தொடக்கம் காலை 11 மணிவரை நடைபெற்றது.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த உடற்பயிற்சி நிகழ்வில் யாழ் மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட முதியோர் சங்க உறுப்பினர்கள், மாற்றுவலுவுடையோர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.