அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் கொலை

அவுஸ்திரேலியாவின் மெல்பேனி நகரில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த நட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நேற்று முன்தினம் (18) இரவு 8.00 மணிக்கும் 9.25இற்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

48 வயதான பிரசாத் சோமவன்ச என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் போக்குவரத்து துறையில் பணிபுரிவதாகவும் சம்பவ தினமான நேற்று அவர் பிரிஸ்பேனில் இருந்துள்ளார்.

அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணை பலமுறை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றும், முடியாது போனதால் அந்தப் பெண்ணின் வீட்டிக்குச் சென்ற போது குறித்தப் பெண் கொலையுண்டிருப்பதையும் கண்டுள்ளார்.

இந்தப் பெண் கடந்த 1999ம் ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்று அங்கு வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை அந்த நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts