யாழ்ப்பாணத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களாகத் தெரிவான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், மற்றும் அக்கட்சியின் முக்கிஸ்தர் சேவியர் குலநாயகம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை செயலணியை அங்குரார்ப்பணம் செய்ய மங்கள சமரவீர யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.