அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கு கீழே 35 முதல் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 முதல் 6 புள்ளிகளாக பதிவானது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
அந்தமான், நிகோபார் தீவுகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.12 மணி அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்த 11 நிமிடத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 5.24 மணிக்கு ஒரு முறையும், 6.54 மணிக்கு மற்றொரு முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்த சில மணிநேரங்களில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த 8 முறையும், நிலத்துக்கு கீழே 35லிருந்து 60 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ரா தீவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.