Ad Widget

ஒஸ்லோவின் பிரதி மேயராக இலங்கை தமிழ் பெண் தெரிவு

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் புதிய பிரதி மேயராக தொழில் கட்சியை சேர்ந்த கம்ஸாஜினி குணரட்னம் என்ற இலங்கைப் பெண் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Gunaratnam kamsajini

கடந்த எட்டு ஆண்டுகளாக கென்சவேட்டிவ் கட்சி வசமிருந்த ஒஸ்லோ நகரின் அதிகாரத்தை நோர்வோயின் தொழில் கட்சியும் அதன் கூட்டணியிலுள்ள பசுமை மற்றும் சோசலிச கட்சிகள் மீள கைப்பற்றியிருந்தன

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கம்ஸாஜினி குணரட்னம், மூன்று வயதாக இருக்கும் போது நோர்வேயில் குடியேறியிருந்தார்

இதன்பிரகாரம் இன்று நடைபெற்ற ஒஸ்லோ நகர புதிய பேரவையின் சந்திப்பில் 27 வயதான கம்ஸாஜினி பிரதி மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஒஸ்லோவின் புதிய மேயர் மரியன் போகெனின் கீழ் அவர் பணியாற்றவுள்ளார்.

Related Posts