Ad Widget

ரவிராஜ் கொலை – கருணாவிடமும் தொடங்கியது விசாரணை!

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு கருணா நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணாவிற்கு தெரிந்தே ரவிராஜ் கொலை மேற்கொள்ளப்பட்டது என புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மீண்டும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் ரவிராஜ் கொலை செய்யப்பட்டிருந்தார். கொலைச் சம்பவம் தொடர்பிலான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts