பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபாய் புலமைப்பரிசில் 4,000 ரூபாயாக அதிகரிக்க பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாபொல புலமைப்பரிசில் தொகையை 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவுள்ளதால் அதனுடன் ஒப்பிட்டு இதனை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.