Ad Widget

ஏ9 வீதியில் வயோதிபரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, ஏ9 பரந்தன் வீதியில் வயோதிபரின் சடலமொன்று பலத்த காயத்துக்குள்ளான நிலையில் நேற்று சனிக்கிழமை (12) காலை மீட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் பயணித்த குறித்த வயோதிபரை, வெள்ளிக்கிழமை இரவு வாகனமொன்று மோதிவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் நேற்று காலை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வயோதிபர் யார் என்பது தொடர்பில் கண்டறியப்படவில்லையெனவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts