Ad Widget

பனம் பொருள் உற்பத்தியாளர்களுக்கான இலகு கடன் திட்டம்!

பனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வரையிலான இலகு கடன் வசதியும் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வசதியையும் வழங்குவதற்கு பனை அபிவிருத்திச் சபை முன்வந்துள்ளது.

பனம் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு பாவனைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்யும் வகையில் கடன் வழங்கப்படவுள்ளது. பனம் பொருள் உற்பத்தி தொழில் முயற்சியாளர்கள் வா்வின் எழுச்சி திணைக்களம் ஊடாக கடன் வசதியை பெற்றுக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபா இலகு கடனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Posts