தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளரொருவர் நேற்றிரவு உடுப்பிட்டி பகுதியினில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அதே வேளை கனகராயன் குளப்பகுதியினில் வைத்து மற்றுமிரு ஆதரவாளர்கள் வேட்பாளர் ஒருவரின் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு வடமராட்சி பகுதியினில் பிரச்சார நடவடிக்கைகளினை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியிருந்த அவரை அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் நபர்கள் தாக்கியுள்ளனர்.செயின் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குண்ட அவர் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினில் அயலவர்களால் மீட்டெடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அதே போன்று வவுனியாவினில் நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார கூட்டத்தினில் பங்கெடுக்க சென்று கொண்டிருந்த மற்றுமிரு ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
நேற்று தனது செயற்பாட்டாளர்களிற்கு மது விருந்தொன்றை வேட்பாளர் ஒருவர் வைத்திருந்ததாகவும் அதிலிருந்தவர்களே முன்னணியின் ஆதவாளர்களை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவங்கள் தொடர்பினில் தேர்தல் கண்காணிப்பு அலுவலகங்கள் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.