கோண்டாவில் டிப்போ சந்தியில் விபத்து: ஸ்தலத்தில் ஒருவர் சாவு

யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக, வீதியில் நின்ற வயோதிபரை கூலர் ரக வாகனம் மோதியதில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கூலர் ரக வாகனம் மோதியதில் உரும்பிராய் தெற்கு சேர்ந்த சீனியர் ஞானம் (வயது 55) என்பவர் உயிரிழந்தவராவார்.

இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், கூலர் ரக வாகனத்தை பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர். அவ்விடத்துக்கு சென்ற கோப்பாய் பொலிஸார் பதற்றத்தை தணித்து, பொதுமக்களை விரட்டினர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts