நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (27) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணியினரால் யாழ்ப்பாணத்தில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
’19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை தடுக்கும் சூழ்ச்சியை தோற்கடிப்போம்’ என தலைப்பிடப்பட்டே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேறுவதற்கு, ஆளுங்கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்கும்வேளை, முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பான எம்.பி.க்கள் அதனை எதிர்த்து வந்தமை குறிப்பிடத்தக்கது