இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முன்னாள் முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்கருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது ஊழியர் சங்கம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
வடபிராந்திய முகாமையாளராக கடமையாற்றிய அவர் கடந்த புதன்கிழமை (22) முதல் வன்னிச் சாலைகளுக்கான முகாமையாளராக மாற்றப்பட்டுள்ளார்.
வடபிராந்திய முகாமையாளராக அவர் கடமையாற்றிய காலப்பகுதியில் செய்த மோசடிகள், லஞ்சம் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட விடயங்களை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலதிக முறைப்பாடுகளையும் கடிதம் மூலம் தெரிவிக்க முடியும் எனவும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் முறைப்பாட்டுக் கோவையின் இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது.