எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்ட்ட 37 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 4 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் இலங்கைக் கடற்படையினரால் 5 படகுகளில் வந்த 37 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மீண்டும் குறித்த வழக்கு இன்று நீதிபதி கணேசராசா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த நீதிபதி குறித்த 37 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.