Ad Widget

இ.போ.ச. பஸ் – பிக்கப் விபத்தில் இருவர் பலி! இருவர் படுகாயம்!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்ஸும் இலங்கை மின்சார சபையின் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்றிரவு 7.30 மணிக்கு மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் தச்சரம்பனில் இடம்பெற்றுள்ளது.

இதில் இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த பணியாளர்களான மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் ஜீவராஜ் (வயது 26), கைதடி நுணாவிலைச் சேர்ந்த துரைராஜசிங்கம் தயாபாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.

வேகமாக சென்ற பிக்கப் குறுக்கே வந்த மாடு ஒன்றுடன் மோதுண்டு கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இ.போ.ச. பஸ்ஸுடன் மோதியதாகத் தெரியவருகின்றது.

படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்துக் குறித்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

Related Posts