Ad Widget

இலங்கை மீனவர்கள் 30 பேரும் இந்திய மீனவர்கள் 66 பேரும் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புது வருடத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்தியா நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்துள்ளது.

இந்திய சிறைகளில் இருந்த 30 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்துள்ளதுடன் இலங்கை சிறையில் இருந்த 66 இந்திய மீனவர்களை இலங்கை அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சர்வதேவ கடல் எல்லையில் வைத்து இரண்டு நாட்டு அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related Posts