Ad Widget

கூட்டமைப்பின் நிலைப்பாடு 27 ஆம் திகதி

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

mavai mp in

இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படித்துக் கொண்டிருக்கிறது. இந்த வாரக் கடைசியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே இறுதி முடிவை எடுப்பார்

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளுடனும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கட்சிப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினோம். இதற்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பில் எங்கள் கட்சியினருக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஆனால் எங்களின் நிலைப்பாட்டை சம்பந்தனின் வருகையின் பின்னரே அறிவிப்போம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts