Ad Widget

இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – ஈ.பி.டி.பி

இயற்கை தாண்டவத்தால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களின் அன்றாட வாழ்வியலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை என அந்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வலி.வடக்கு மக்களை திங்கட்கிழமை (01) மாலை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், குகேந்திரன் தொடர்ந்து கருத்து கூறியதாவது,

வலி.வடக்கு மக்களின் இருப்பிடங்களை பார்க்கும் போது, வேதனையாகவுள்ளது. இயற்கையின் பிடியில் தற்போது நாங்கள் சிக்கியுள்ளோம். இது தற்காலிக நிலைமை தான். மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

மக்களுடைய தேவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளினூடாக மேற்கொண்டு வருகின்றார் என குகேந்திரன் தெரிவித்தார்.

Related Posts