Ad Widget

உயர்தர சித்தியுடன் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்

உயர்தரத்தில் சித்தியடைந்த 50, 000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

bandula_gunawardena300px

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் ‘குரு பிரதிபா பிரபா’ விருது வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் நேற்று நடைபெற்ற போதே அவர் அங்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்- பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர் பீடங்களில் கற்காது உயர்தர தகமை மட்டுமே கொண்ட 50 000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படுகின்றவர்கள் தேசிய கல்வி நிறுவகத்தினால் 4 வருட பயிற்சியளிக்கப்பட்டு கல்விப் பட்டதாரி பட்டமளிப்பு வழங்கப்படும்.

அத்துடன் கிராமிய பாடசாலைகளில் வெற்றிடங்கள் நிலவும் கணிதம்- ஆங்கிலம்- விஞ்ஞானம்- தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கும் ஆசிரியராக இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts