யாழ். பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு மின்னேரியா,மாதுறு ஓயாவில் நடைபெறும் தலைமைத்துவப் பயிற்சிக்கு செல்வதற்காக விசேட பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள தலைமைத்துவப் பயிற்சிக்கு அன்றைய தினம் காலை 6.30 மணி தொடக்கம் மாணவர்களின் வருகைக்கு ஏற்ப யாழ்.மத்திய பேருந்தில் இருந்து மின்னேரியா, மாதுறுஓயா வரை சேவையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
எனவே தலைமைத்துவ பயிற்சிக்கு செல்லும் மாணவர்கள் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் தங்களது பயண முற்பதிவினை மேற்கொள்ளலாம் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணசாலை முகாமையாளர் அறிவித்துள்ளார்.