புத்தூர் சந்திப்பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பயனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலிவையை சேர்ந்த அரியகுட்டி யோகரட்ணம் (வயது 59) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் புத்தூர் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த டிப்பரின் சாரதியை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.